Home NEWS பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய திண்டுக்கல் லியோனி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்..!!! பெண்களை இழிவுபடுத்துவது...

பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய திண்டுக்கல் லியோனி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்..!!! பெண்களை இழிவுபடுத்துவது திமுகவின் வாடிக்கை – எடப்பாடி பழனிச்சாமி.

leoni in election campiagn

திண்டுக்கல் லியோனி சிறந்த பட்டிமன்ற பேச்சாளராக மக்களிடம் பிரபலமானவர். தற்போது இவர் திமுக கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அந்தவகையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை ஆதரித்து லியோனி வாக்கு சேகரித்தார்.

சிவசேனாதிபதி அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்த லியோனி பிரச்சாரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்ததாக பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அந்த பிரச்சாரத்தில் ஃபாரின் மாடுகள் எல்லாம் மிஷின் வைத்து தான் பால் கறக்கிறார்கள் ஒரு மணி நேரத்துக்கு 40 லிட்டர் பால் கறக்கும் அந்த பாரின் மாட்டு பாலை குடித்துவிட்டு பெண்கள் பலூன் மாதிரி ஊதிகிடக்குறாங்க அவர்களுடைய பிள்ளைகளும் அதே மாதிரி ஊதிக் கிடக்கிறார்கள் என்று கூறியவர் ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு எட்டு வடிவத்தில் இருக்கும் குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சிருப்பாங்க இப்ப 8 போல இருந்த இருப்பு பாரின் மாட்டு பாளை குடிச்சி பேரல் போல ஆகிடுச்சு என்று லியோனி பேசிய இந்த பேச்சு மக்களிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

ஒரு நல்ல பட்டிமன்றப் பேச்சாளர் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களை இழிவு படுத்தி பேச வேண்டுமா என்று மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர் இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது திண்டுக்கல் லியோனி பெண்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். பெண்களின் இடுப்பை சம்பந்தப்படுத்தி பேசிய திண்டுக்கல் லியோனி அவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

பெண்களை இழிவாக பேசும் திமுகவினரை தட்டிக்கேட்க ஸ்டாலினுக்கு திராணி இல்லை ஆண்டாண்டு காலமாக பெண்களை இழிவுபடுத்துவது திமுகவின் வாடிக்கை என்று கூறி உள்ளார்.

Exit mobile version