சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி குடலிறக்கம் பிரச்சனை காரணமாக ஏப்ரல் மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியம் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.