Home NEWS அதிக வட்டி இல்லாமல் கடனை பெற வேண்டுமா உடனே இதை செய்யுங்க..!!!

அதிக வட்டி இல்லாமல் கடனை பெற வேண்டுமா உடனே இதை செய்யுங்க..!!!

loan process

லோன் app மூலம் கடன் பெற்று அவதிப்படாமல் குறைந்த வட்டியில் பாதுகாப்பாக கடன் பெறுவது எப்படி பொது மக்களுக்கு ஆலோசனை தரும் வங்கி அதிகாரிகள்.

கடன் செயலிகள் மூலம் கந்து வட்டியை விட அதிக வட்டிக்கு கடன் வாங்கி பிரச்னையில் சிக்காமல் இருக்க எந்தெந்த வழிகளில் பாதுகாப்பான முறையில் கடன் பெறலாம் என வங்கி அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் பலர் வேலை வாய்ப்பை இழந்து ஊதியம் இன்றி தவித்து வருகின்றனர், வியாபாரத்தில் நஷ்டம் எனும் பல்வேறு சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்த சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மீளமுடியாமல் லோன் ஆப்களை பதிவிறக்கம் செய்து அதில் அதிக வட்டிக்கு பணம் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் மக்கள்.

கடன் விரைவாக கிடைக்கும் என்பதை எண்ணி லோன் செயலியை பதிவிறக்கம் செய்து பதிவிரக்கம் செய்து அதன் ஆபத்தைப் பற்றி உணராமல் கடன் வாங்கி வருகின்றனர். அதிக வட்டி என்பதால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் கடன் கொடுத்த தேதிக்கு பணம் திருப்ப சரியான நேரத்தில் கொடுக்காததால் அவர்களை மிரட்டியும் வருகின்றனர் என்று செய்திகள் பரவி வருகிறது . சமீபத்தில் ஒரு சிலர் தற்கொலையும் செய்து கொண்டனர்.

நாம் கடன் வாங்குகிறோம் என்றால் நம்மை மீறி வரும் செலவுக்காக தான் வாங்குகிறோம் ஆடம்பர செலவுக்காக வாங்குபவர்கள் மிகக் குறைவு. நாம் கடன் வாங்கும் தொகை நாம் திருப்ப தரக்கூடிய அளவில் இருந்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை நம்மையும் மீறி கடன் வாங்கும்போது தான் நம் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறோம்.

கடனை அடைக்க முதலில் தங்களது வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெறலாம் ஏனென்றால் இதற்கான வட்டி விகிதம் மிகக் குறைவு . தங்களது உறவினர்கள் நண்பர்கள் என தெரிந்தவர்களும் வட்டி இல்லாமலும் அல்லது குறைந்த போட்டிக்கும் கடன் கேட்டுப் பெறலாம். வங்கிகளில் தனிநபர் கடன் பெறலாம் அடுத்ததாக சொத்து ஆவணங்கள் இருந்தால் அதை வைத்து கடன் பெறலாம். சின்ன வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூட கடன் செயலிகள் மூலம் கடன் பெற யோசிக்கிறார்கள்.

அப்படி ஒரு தேவை ஏற்பட்டால் ஜீரோ பேர்செண்டேஜ் கிரெடிட் கார்டுகளை பல வங்கிகள் வழங்கி வருகிறது அதனை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்.

தொழில் செய்ய கடன் வேண்டுமென்றால் தற்பொழுது பிரதமர் அறிவித்துள்ள கிசான் திட்டத்தின் மூலம் கடன் பெறலாம் அதற்கு வட்டியும் குறைவு. கடல் சம்பந்தப்பட்ட கேள்விகளை உங்களது வங்கி அதிகாரிகளிடம் நீங்கள் கேட்கலாம். பாதுகாப்பு இல்லாத இடத்தில் நாம் கடன் வாங்கி மாட்டிக் கொள்வதை விட இது சிறந்தது.

Exit mobile version