Home CINEMA NEWS துருவ் விக்ரம் மற்றும் படக்குழுவினர் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு…!!!...

துருவ் விக்ரம் மற்றும் படக்குழுவினர் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு…!!! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய படக்குழுவினர்.

dhruv vikram

கடல் பகுதியில் சென்றபோது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. துருவ் விக்ரம் உட்பட படக்குழுவினர் 90 பேர் சென்னை திரும்பினார். விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை.

படத்தின் ஷூட்டிங்கை டார்ஜிலிங்கில் நடத்த முடிவு செய்தனர். அதற்காகத் துருவ் விக்ரம், துணை நடிகர்கள் டெக்னீஷியன்கள் என 90 பேர் விமானத்தில் நேற்று முன் தினம் டார்ஜிலிங் புறப்பட்டனர். விமானம் புறப்பட்டு 55 நிமிடங்களில் கடல் பகுதியில் சென்றபோது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. விமானி துரிதமாக செயல்பட்டு உடனே விமானத்தில் சென்னைக்கு திரும்பினார்.

இதையடுத்து துரு மற்றும் படக்குழுவினர் பத்திரமாக சென்னை வந்தடைந்தனர். இந்நிலையில் நேற்று துருவ் விக்ரம் மற்றும் படக்குழுவினர் வேறு விமானத்தில் டார்ஜிலிங் சென்றனர்.

Exit mobile version