Home NEWS சென்னை டூ திருவள்ளூருக்கு சைக்ளிங் சென்று ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திர பாபு…!!!

சென்னை டூ திருவள்ளூருக்கு சைக்ளிங் சென்று ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திர பாபு…!!!

sylendra babu

சென்னையிலிருந்து திருவள்ளுவருக்கு சைக்கிளிங் சென்று ஆய்வு செய்தார் டிஜிபி சைலேந்திரபாபு. டிஜிபி சைலேந்திரபாபு அங்கு உள்ள தீயணைப்பு துறை வீரர்களை நேரில் சந்தித்து பேசினார். மேலும் அங்குள்ள காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். டிஜிபி சைலேந்திரபாபு வாரந்தோறும் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார்.

அதோடு உடலை ஃபிட்டாக வைத்திருப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். அவ்வப்போது சைக்கிளில் செல்லும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் சென்னையிலிருந்து திருவள்ளுவரூக்கு சைக்கிளிங் சென்று தீயணைப்புத்துறை வீரர்களை சந்தித்து கலந்துரையாடினர். அதைத் தொடர்ந்து அங்குள்ள கிராமிய காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு உள்ள கோப்புகளை முறையாக பாதுகாக்கப்படுகின்றன என ஆய்வு செய்தார். அதேபோல் காவல் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறை ஆய்வாளர் அறை சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து நேரடியாக காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று குடியிருப்புவாசிகள் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்பு காவலர் குடியிருப்பில் இருந்த குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடிய பின்பு புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் அங்கிருந்து ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள பூண்டியில் உள்ள நீர்த்தேக்கத்தை சுற்றிப்பார்த்து விட்டு தனது சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். அதோடு ஆய்வின்போது பல காவல் துறையினரும் உடன் இருந்தனர்.

Exit mobile version