Home NEWS இரவு நேரத்தில் காவல்நிலையத்தில் தீடீர் விசிட் அடித்த டிஜிபி சைலேந்திர பாபு…!!!

இரவு நேரத்தில் காவல்நிலையத்தில் தீடீர் விசிட் அடித்த டிஜிபி சைலேந்திர பாபு…!!!

dgp

கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க டிசம்பர் 17 வெள்ளிக் கிழமை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பயணம் மேற்கொண்டார். பின்னர் இரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோவையிலிருந்து ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் சென்றார்.

மேலும் சத்தியமங்கலம் செல்லும் வழியில் அன்னூர் அருகே உள்ள கோவில்பாளையம் காவல் நிலையத்தில் திடீர் என என்று ஆய்வு மேற்கொண்டார். அந்தக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் டிஜிபி சைலேந்திரபாபு வரவேற்றனர்.

பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் குற்றங்களை தடுக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மனு கொடுக்க வரும் மக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டுமென கூறினார்.

அதோடு காவல் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த சமயம் காவலர்கள் தனது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது டிஜிபி சைலேந்திரபாபு திடீரென காவல் நிலையத்தில் நுழைந்ததும் காவலர்கள் செய்வதறியாமல் பதற்றம் அடைந்னர்.

உடனடியாக டிஜிபி அவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு சக காவலர்களுக்கு டிஜிபி வருகையைப் பற்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version