யூடியூப் சேனலில் குக்கிங் வீடியோ மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம் என்று பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பிரபலமானவர் தான் டாடி ஆறுமுகம். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர் யூடியூபில் வெளியிடும் குக்கிங் வீடியோவை பார்ப்பதற்காகவே பலர் காத்து கிடக்கின்றனர்.
தன்னுடைய தந்தையின் சமையல் திறனை உலகத்திற்கே யூடியூப் சேனல் மூலம் தெரியப்படுத்தியவர் கோபிநாத் 32 வயது இருக்கும் இவர் தன்னுடைய தந்தை சமையல் செய்யும் வீடியோவை வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்று ஒரு சேனல் ஆரம்பித்து வாடிக்கையாக பதிவிட்டு வந்தார்.
ஆறுமுகம் அவர்கள் செய்யும் சமையலை லட்சக்கணக்கானோர் பார்த்து வந்தனர். இந்த யூடியூப் சேனலை 4.62 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். யூடியூப் சேனல் மூலமாக லட்சம் லட்சமாய் சம்பாதித்த டாடி ஆறுமுகம் அவர்கள் மதுரை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் ஹோட்டல் திறந்துள்ளார்.
டாடி ஆறுமுகம் அவர்களின் ஹோட்டலில் விலை கூடுதலாகும் அளவு கம்மியாகும் இருப்பதாக உணவுப் பிரியர்கள் கூறிவருகிறார்கள். தற்பொழுது புதுச்சேரியில் உள்ள டாடி ஆறுமுகம் உணவகத்தை நடத்தி வருகிறார் அவருடைய மகன் கோபிநாத்.
கோபிநாத் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் பப் ஒன்றுக்கு சென்று நன்றாக குடித்துவட்டு தகராறு செய்ததோடு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரியவந்துள்ளது. 8 மணிக்கு மது அருந்த தொடங்கிய கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் 11 மணிக்கு மேல் ஆகியும் மது ஆர்டர் செய்ததால் அங்கு வேலை பார்த்த ஊழியர் 11 மணிக்கு மேல் மது தர மறுத்து விட்டார் அதனால் கோபமடைந்த கோபிநாத் நான் யார் தெரியுமா எனக்கே கிடையாது என்கிறாயா என்று அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து தாக்க சென்றதாகவும் அருகில் இருந்த அவரது நண்பர்கள் தடுத்ததாகவும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்பொழுது அந்த பப்பில் வேலை செய்த ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாடி ஆறுமுகம் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள் தற்போது தாடி ஆறுமுகம் அவர்களின் மகன் கோபிநாத் அவர்கள் போலீசாரிடம் குடிபோதையில் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.