Home NEWS திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செம்ம கெத்தாக பாராட்டிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.!!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செம்ம கெத்தாக பாராட்டிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் அதன் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து புகார் தாரர் இடம் கருத்து கேட்கும் நடைமுறையை மாவட்ட எஸ்பி விஜயகுமார் தொடங்கியுள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு போலீஸ் அதிகாரிகள் அல்லது முறையான அறிவுரைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக காவல் துறையில் உள்ளவர்கள் மக்களிடம் இன்னும் நெருக்கமாக பழக முடியும் இது தங்களது கடமைகளை இன்னும் மேம்பட செய்ய முடியும் என விஜயகுமார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இந்திய ஐபிஎஸ் சங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா திருப்பத்தூர் மாவட்ட காவல் ஆணையர் எஸ்பி விஜயகுமாருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இது போன்ற சிறப்பான அசத்தல் முயற்சிக்கு எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார் இதற்கு நன்றி தெரிவித்து அவரும் பதில் ட்வீட் தெரிவித்துள்ளார்.

Exit mobile version