கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் தீவிரமாக இருப்பதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே 1 அதாவது இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2.45 கோடிக்கும் மேற்பட்டோர் கோவின் இணையதளத்தில் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி முன்பதிவு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கியது முதல் நாளே 1.37 கோடி மக்கள் பதிவு செய்திருந்தனர் அதனை தொடர்ந்து இரண்டாவது நாளான 29-ஆம் தேதி 1.04 கோடி மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். முதல் ரெண்டு நாட்களிலே 2.41 கோடி மக்கள் தடுப்பு ஊசி போடுவதில் ஆர்வம் கட்டி உள்ளனர்.
மக்கள் தயக்கம் இல்லாமல் தடுப்பு ஊசி போட முன் வர வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.