Home NEWS கொரோனா பொது நிவாரண நிதி வழங்கிய சிறுவர், சிறுமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கிபிட்!!! என்ன...

கொரோனா பொது நிவாரண நிதி வழங்கிய சிறுவர், சிறுமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கிபிட்!!! என்ன கிப்ட்னு தெரியுமா.

M.K.Stalin

கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு கொரோனா பெருத்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ் நாட்டை மீட்டெடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராள நிதி வழங்கி உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதனை ஏற்ற பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமானியர்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரும்தொற்றை விரட்டியடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். இதில் தங்களில் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களில் பெரும் கருணை என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.

எனவே கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறுவர்,சிறுமிகளுக்கு அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் உலகப் பொதுமுறையாம் திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


Exit mobile version