Home CINEMA NEWS பிரபல நடிகை உறவு மற்றும் விவாகரத்து விவகாரம் அடுக்கடுக்காக பயில்வான் சொன்ன தகவல்..!!! ஆதாரம் இல்லாமல்...

பிரபல நடிகை உறவு மற்றும் விவாகரத்து விவகாரம் அடுக்கடுக்காக பயில்வான் சொன்ன தகவல்..!!! ஆதாரம் இல்லாமல் பேசவில்லை பயில்வான் ரெங்கநாதன் பர பர பேட்டி.

case filed against bailwan renganathan

பயில்வான் ரங்கநாதன் பிரபலமான நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடக்கும் கிசுகிசுக்களை வெளிப்படையாக தெரிவித்து வந்தார். கோலிவுட் வட்டாரத்தில் நடக்கும் விஷயங்களை பயில்வான் ரங்கநாதன் அவர்கள் மறைக்காமல் அப்படியே சொல்வதால் இவருடைய வீடியோக்களை தொடர்ந்து ரசிகர்களும் பார்த்து தெரிந்து கொண்டு வந்தனர்.

நடிகர் நடிகைகளின் ரகசிய உறவு மற்றும் நடிகர் நடிகைகளின் திருமண வாழ்வில் நடந்த பிரச்சினைகள் என்று அவர்களின் பர்சனல் விஷயங்களையும் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் யூடியூப் சேனல் வழியாக தெரிவித்து வந்தார். கிசுகிசுக்களை சுவாரசியமாக சொல்வதால் பயில்வான் ரங்கநாதன் அவர்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்து வந்தனர் ரசிகர்கள்.

குறிப்பாக பிரபல நடிகை ஓவியா பற்றி தனது வீடியோவில் பதிவிட்டு இருந்தார் பயில்வான். ஓவியா அவர்கள் களவாணி படத்திற்கு பிறகு நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கலாம் ஆனால் பட வாய்ப்பிற்காக ஓவியா சில தவறான விஷயங்களை செய்து வந்தார் குறிப்பாக ஓவியாவிற்கு தெரியாத மகாபலிபுரம் ஹோட்டலே கிடையாது என்று கூறியிருந்தார். அந்த வீடியோ ஓவியாவின் பார்வைக்கு சென்றது ஓவியாவும் பயில்வான் அவர்களை திட்டி பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து பயில்வான் அவர்கள் நடிகர் நடிகைகளின் வாழ்க்கையை பற்றி பேசி வந்ததால் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வந்தார்கள் சமூக வலைதளங்களில். எதற்கும் அஞ்சாத பயில்வான் ரங்கநாதன் என் மீது தவறு இருந்தால் கூறுங்கள் வழக்கு தொடருங்கள் நான் சினிமாவில் உள்ள அசுத்தத்தை சுத்தம் செய்யும் சலவைகாரன் மட்டுமே சினிமா உலகில் நடக்கும் சில அசுத்தங்களை சினிமாக்காரர்கள் மட்டுமே சுத்தம் செய்ய முடியும் நான் கூறிய ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கின்றது.

உண்மையை மட்டுமே பேசி வருகிறேன் பத்திரிக்கையில் வரும் செய்திகளையும் கூறி வருகிறேன் ஆதாரமில்லாமல் அவதூராக நான் யாரையும் பேசவில்லை என்னிடம் சாட்சிகள் இருப்பதினால் தான் நான் பேசுகிறேன். சினிமாக்காரர்கள் என்னையும் சேர்த்து தான் ஒழுக்கமானவர்களாக வாழுங்கள் ஒழுக்கமாக இருப்பவர்களை பற்றி பேசுவதே இல்லை. நான் உண்மையை பேசுவதால் மக்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள் சம்பந்தப்பட்டவர்களை திருந்த சொல்லுங்கள் நான் அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார் பயில்வான்.

Exit mobile version