நமிதா மாரிமுத்து விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் ஒரு ஆழமான இடத்தை பிடித்துச் சென்றார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நமிதா மாரிமுத்து தனது வாழ்வில் பட்ட கஷ்டங்கள் தன்னை எப்படியெல்லாம் இந்த உலகம் பார்த்தது என்றும், திருநங்கை என்றால் ஏன் இப்படி ஒரு பார்வை என்றும் கேட்டு தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறி பார்ப்பவர்கள் மனதை கனமாக்கினார்.
கண்ட்ரோல் செய்ய முடியாமல் அழுத நமிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்ட இமான் அண்ணாச்சி அழுகையை நிறுத்த சொல்லி கட்டிப்பிடித்து கண்கலங்கி ஆறுதல் கூறினார்.
திடீரென்று எந்த ஒரு காரணமும் சொல்லாமல் நமிதா மாரிமுத்து அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் நாடோடிகள் படம் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நமிதா அதுமட்டுமல்லாமல் உலக அளவில் நடந்த அழகிப் போட்டியிலும் கலந்து கொண்டு வென்றுள்ளார்.
புத்தாண்டு தினத்தில் நமிதா மாரிமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் திரிசூலம் ஏந்தி புலி அருகில் அமர்ந்துகொண்டு அம்மனையே கண்முன் நிறுத்தியிருக்கிறார் நமிதா மாரிமுத்து.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது ஆதிபராசக்தி வேடம் அணிந்து போட்டோ ஷூட் செய்து இருப்பது எனக்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் 2022-ல் புத்துணர்ச்சியோடு தொடங்குவோம் உங்களுடைய ஒத்துழைப்பு தேவை என்று பதிவிட்டுள்ளார்.