பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தற்பொழுது போட்டிகளும் களை கட்ட ஆரம்பித்து விட்டன. சென்ற வாரம் தீபாவளியை முன்னிட்டு மிகவும் கலகலப்பான போட்டிகள் நடைபெற்றன.
தற்பொழுது போட்டிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் தன் காதலை மறந்து தற்பொழுது போட்டியில் களமிறங்கி உள்ளனர் ஷிவானி, மற்றும் பாலா.
இதன் காரணமாக பிக்பாஸ் போட்டியில் கொட்டும் மழையிலும் போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் மழையைக் கூட பொருட்படுத்தாமல் அனைத்து போட்டியாளர்களும் முழு கவனத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்த பிரமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.