மதுப் பழக்கத்திற்கு பல இளைஞர்கள் இன்னும் அடிமையாக உள்ளனர். சமூகத்தில் கொரானா ஊரடங்கால் மது விற்பனை இல்லாததால் பலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் மதுபோதையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரை ஆபாசமாக பேசியது மட்டும் இல்லாமல் அவரை தாக்க முற்பட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஊரடங்கிற்கு பிறகு சென்னையில் மதுபான கடைகள் மற்றும் சொகுசு மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதியில் குடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது மிகவும் அதிகரித்து உள்ளது.
இந்த தகவல் குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து பணிகள் மற்றும் வாகன தணிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை போலீசார் திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
அப்பொழுது திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறம் ஒரு கார் மதுபோதையில் ஓட்டுவது போல் தெரிய வந்தது. அதனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். வாகனத்தில் ஒரு இளைஞரும் ஒரு இளம்பெண்ணும் அளவுக்கு அதிகமான மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.
அதன்பிறகு இவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது இளம் பெண் போலீசாரை மிகவும் ஆபாசமாக திட்டியதும், பணி செய்ய விடாமல் தடுத்து பிரச்சினையில் ஈடுபட்டார் என்பதும் தெரியவந்தது. இவர் ஒரு இளம் பெண் இயக்குனர் என்பது விசாரணையில் தெரியவந்தது . இந்த பெண் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது
இந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்து தற்போது விசாரித்து வருகின்றனர்.