ஆர்யா தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் ஜாலியாக போனது ஆர்யாவின் வாழ்க்கை. ஆர்யாவிற்கு வயதாகிக் கொண்டே போகிறதே என்று வருத்தப்பட்ட அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் வேலையை தீவிரமாக ஒரு பக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பமா அப்ப உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க என்று விளம்பர படுத்தினார்கள். ஏகப்பட்ட பெண்கள் கால் செய்து தங்கள் விருப்பத்தை பதிவு செய்தனர்.
பதிவு செய்த பெண்களில் இருந்து 15 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் பழகி பார்த்த பின் திருமணம் நான் யாரை செய்யப் போகிறேன் என்பதை தெரிவிக்கிறேன் என்று எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பினார்கள்.
15 பெண்களுடன் பழகி பார்த்த ஆர்யா கடைசியில் மூன்று பெண்களை தேர்வு செய்து வைத்து வைத்திருந்தார். இந்த மூன்று பெண்களில் ஒருவரை தான் தேர்வு செய்ய போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த தருணத்தில் எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும் என்று சொல்லி நைசாக கலந்து கொண்டார். அதன்பின் சில மாதங்கள் அமைதியாக இருந்த ஆர்யா அதன்பின் நடிகை சாய்ஷா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆர்யாவிற்கு சைக்கிளிங் செல்வது மிகவும் பிடித்த ஒரு விஷயம். அவருக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களை கூட்டிக்கொண்டு சைக்கிளிங் சென்று வருவார்.
நேற்று அவரது பிறந்த நாளை அவரது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்று கொண்டாடியுள்ளார். பதினோரு மணி நேரத்தில் 300 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்த ஆர்யா. ரோட்டோரத்தில் மரத்தடி அருகில் படுத்து கொண்டு ஓய்வு எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அன்று இரவு ஆர்யாவின் 40 வது பிறந்தநாளை முன்னிட்டு தடால்புடலான விருந்து ஏற்பாடுகளை செய்து இருந்தார் அவரது காதல் மனைவி சாயீஷா.
இரவு விருந்தில் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. நீங்கள் எனக்கு கணவராக கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்றும் உங்களை நேசிக்கும் நான் என்று ஆர்யாவை வர்ணித்து வாழ்த்து கூறி இருந்தார் அவரது காதல் மனைவி.