சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. இப்போது நான்காவது பாகம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஹீரோவாக அவரே நடித்து வருகிறார்.
சுந்தர் சி ஜோடியாக ராசி கண்ணா நடக்கிறார். அவருடைய தங்கையாக தமன்னா நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. மேலும் இந்த படத்தில் முதற்கட்ட படைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று முதல் அரண்மனை 4 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொச்சியில் தொடங்கி இருப்பதாகவும் இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தார். அவர் கால்ஷீட் பிரச்சனையால் விலகியதால் சுந்தர் சி அவரது வேடத்தில் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக சித்தார்த்தன் நடிக்கிறார். ஆண்ட்ரியா, கே. பாக்யராஜ், மீனா ஆகியோர் முக்கிய இடங்களில் நடிக்கிறார்கள்.