சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் தான் அண்ணாத்த. கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
தொடங்கிய இரு நாட்களிலேயே அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனே அண்ணாத்த படத்தின் சூட்டிங்கை நிறுத்தினார்கள் படக்குழுவினர்கள். அதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்த காரணத்தினால் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ரஜினி அவர்களுக்கு உடல்நலகுறைவு என்ற செய்தி கேட்டவுடன் அவரது ரசிகர்கள் பயத்துடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் ரஜினிகாந்த் அவர்கள் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகிறோம். தொடர் கண்காணிப்பில் இருக்கும் ரஜினி அவர்களின் உடல் நிலை தற்பொழுது ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருந்து கொடுத்து அவருடைய ரத்த அளவை சரியாக கையாண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் யாரையும் சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை என்பதையும் தெரிவித்து இருந்தனர்.
இன்று மாலை வெளியாகும் அவரது உடல் நிலை அறிக்கையை பொறுத்து அவர் எப்போது மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.
இந்த செய்தியை அறிந்தவுடன் அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ரஜினியின் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருகின்றனர். மீண்டு வாருங்கள் தலைவா என்று குரல் கொடுத்துவருகின்றனர் அவரது ரசிகர்கள்.