அமலாபால் முதல் படமே சிந்து சமவெளி என்ற சர்ச்சையான படத்தில் நடித்திருந்தார். மாமனார் மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்த அந்தப் படத்திற்கு பெரிய எதிர்ப்பு வந்தது. அதன்பின் மைனா என்ற ஒரே படத்தில் தனது மொத்த இமேஜை மாற்றிக்கொண்டார் அமலாபால்.
மைனா படத்தில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் அதனைத் தொடர்ந்து அமலாபாலுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால் இயக்குனர் AL விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அமலாபாலும் பவிந்தர்சிங்கும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். பவிந்தர் சிங் சில நாட்கள் கழித்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அமலாபால் மறுமணம் செய்து கொண்டதாக பேசி வந்தனர் ஆனால் திருமணம் நடக்கவில்லை என்று அமலாபால் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது.
ஒரு சில பிரச்சனைகளால் தனது காதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார் அதன்பின் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பார்வரை அமலாபால் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளிவந்தது.
பவிந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பில் இருக்கும் அமலாபால் ரசிகர்களுடன் தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களுடன் உரையாடுவார்.
அப்படி உரையாடும் போது ஒரு ரசிகர் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும் என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அமலாபால் நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் அதை நானே இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்னை அறிந்து கொள்ளும் பயணத்தில் நான் இருக்கிறேன் அதை கண்டுபிடித்த பிறகு உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.