Home CINEMA NEWS ஷூட்டிங் ஸ்பாட்டில் பளார் என்று கன்னத்தில் அறை விட்ட நடிகை..!!! அதிர்ச்சியில் படக்குழுவினர் வெளியான தகவல்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் பளார் என்று கன்னத்தில் அறை விட்ட நடிகை..!!! அதிர்ச்சியில் படக்குழுவினர் வெளியான தகவல்.

aishwarya rajesh slapped assistant in shooting spot

ஐஸ்வர்யா ராஜேஷ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகை. தமிழுக்கு நீ தானா அவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து அட்டக்கத்தி என்ற படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Kanaa Aishwarya Rajesh Movie Photos HD

அதன்பின் விஜயசேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்த இவர் காக்கா முட்டை என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரும் கவனிக்கப்படும் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷின் வடசென்னை படத்தில் வடசென்னை பாஷை பேசி நடித்து அசத்தி இருந்தார்.

கா பெ ரணசிங்கம் என்ற படத்தில் வெளிநாட்டில் இறந்த தனது கணவர் விஜய்சேதுபதியின் உடலை வாங்க போராடும் பெண்ணாக நடித்து பலரை கண் கலங்க வைத்தார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படம் பெரிய திருப்பத்தை இவருக்கு கொடுத்தது. தற்பொழுது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் ஜோடியாக நடித்து உள்ளார்.

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கும் இந்த நடிகையை பற்றி தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பான தகவல் பரவிவருகிறது. ஐஸ்வர்யா
ராஜேஷை வைத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் ஒரு படத்தின் சூட்டிங் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

படு பிசியாக அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அசிஸ்டன்ட் ஒருவரை அழைத்து அவரிடம் வெந்நீர் கேட்டாராம்.

ஐஸ்வர்யாவின் அசிஸ்டன்ட் கேரவனுக்குள் சென்று வெந்நீர் எடுத்துக்கொண்டு சில நிமிடங்கள் கழித்து வந்தாராம் வந்தவுடன் டென்ஷனான ஐஸ்வர்யா ராஜேஷ் நான் வெந்நீர் கேட்டு எவ்வளவு எவ்வளோ நேரம் ஆயிடுச்சு என்று அவர் அசிஸ்டன்ட் வெந்நீர்ரை கையில் வைத்திருக்கும் போது பளார் என்று ஒரு அறை விட்டாராம்.

அதனை பார்த்த மொத்த படக்குழுவினரும் பயங்கர ஷாக் ஆனார்களாம். இந்த பெண்ணா இப்படி எல்லாம் செய்யுது என்று இதனை ஒரு பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version