Home CINEMA NEWS பச்சை பச்சையான வார்த்தைகளை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!!! திணறி போன இயக்குனர்.

பச்சை பச்சையான வார்த்தைகளை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!!! திணறி போன இயக்குனர்.

aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் நிறத்தில் கம்மியாக இருந்தாலும் நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். நடனம் கற்றுக்கொண்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து வென்றும் இருக்கிறார் ஐஸ்வர்யா. இவர் தெலுங்கு நடிகர் ராஜேஷ் என்பவரின் மகள். இவருடைய தாத்தா அமர்நாத் பிரபலமான தெலுங்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளர். இவருடைய அத்தையை தெலுங்கு சினிமாவின் கோவை சரளா என்றே சொல்லலாம்.

குடும்பமே தெலுங்கு திரையுலகில் உள்ளது ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழில் நடிக்க தான் விருப்பமாம். அதனால் தமிழில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். முதலில் ஒரு சில படங்கள் தமிழில் வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்த படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது.

அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை, கனா, தர்மதுரை, வடசென்னை இவரது தமிழ்த் திரைப் பயணத்தில் முக்கியமான படங்கள். இவரது நடிப்பு யதார்த்தமாக இருப்பதால் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார். சமீபத்தில் வெளியாகி உள்ள க/பெ.ரணசிங்கம் என்ற படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.

வெற்றிமாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி கிடைக்கும் நடிகைகள் மத்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது எப்படி தெரியுமா. வெற்றிமாறன் வடசென்னையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளை போட்டோ ஷூட் செய்து பயிற்சி கொடுத்து பார்த்து வந்துள்ளார் ஆனால் அவர் பார்த்த நடிகைகள் அனைவரும் அவரது கதாபாத்திரத்திற்கு சற்று செயற்கையாகவே இருந்ததாம்.

வெற்றிமாறன் ஐஸ்வர்யா ராஜேஷிடம் உனக்கு எவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேச தெரியுமா பேசு என்று கூறியிருக்கிறார் அதற்கு பேய் வாய் திறந்து பேச ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பச்சை பச்சையாக அந்த மாதிரியான மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் பேச்சைக் கேட்ட வெற்றிமாறன் சற்று திகைத்து போய் நீதான் இந்த படத்தில் ஹீரோயின் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம். இதை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Exit mobile version