சார்பட்டா பரம்பரை நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்யாவிற்கு ஒரு தரமான படம் என்று கூறலாம் அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ரஞ்சித்துக்கு மாபெரும் திருப்புமுனை படமாக இந்த படம் அமைந்துள்ளது. மெட்ராஸ் படத்திற்கு பிறகு ரஞ்சித் யார் என்பதை நிரூபித்த படம் தான் இந்த படம். நடுவில் சில படங்கள் ரஞ்சித்துக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கவில்லை சார்பட்டா பரம்பரை மூலம் தான் யார் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்தப் படத்தில் பலரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள் அந்த அளவிற்கு இயல்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து உள்ளனர் குறிப்பாக வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் பசுபதி நடித்துள்ளார். வாத்தியாரே என்று ஆர்யா பசுபதி சைக்கிளில் கூட்டிச் செல்லும் காட்சி மீம் பிரியர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது இன்றுவரை ஆர்யா மற்றும் பசுபதியை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ரசிக்கும்படி பலர் மீம்களை ரெடி செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பற்றி வரும் வசனங்களை நீக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி கதாபாத்திரம் முதல்வர் கருணாநிதி குறித்து பல வசனங்கள் பேசியுள்ளது அப்பொழுது மிசாவில் முதலமைச்சர் மகன் கூட கைது செய்யப்பட்டு இருந்தார் என்று ஒரு வசனம் வந்திருந்தது.
மிசாவில் ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்படவில்லை மிசா காலத்தில் தான் கைது செய்யப்பட்டதை தவிர மிசாவில் கைது செய்யப்பட்டதாக படத்தில் சொல்லியிருப்பது தவறு. யாரை முன்னிலை படுத்தி திருப்தி படுத்த படத்தை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை அது மட்டும் அல்லாமல் வரலாற்று படம் என்று கூறிவிட்டு தவறாக சித்தரிக்கப்பட்டு படத்தை வெளியிட்டால் மக்களிடம் தவறான விஷயங்கள் சென்று சேரும். மிசாவில் ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டார் என்ற எந்த ஒரு அரசு ஆவணமும் இல்லை அதனை அவர்களும் நிரூபிக்கவில்லை ஸ்டாலின் அவர்களை முன்னிலைப் படுத்துவதற்காக இதுபோல உண்மைக்கு மாறான தகவல்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் இது பல தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இந்த படத்தை தயாரித்தவர்கள் மற்றும் ரஞ்சித் அவர்கள் இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பதை அனைத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகளில் பிரசுரித்து வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார் அப்படி செய்யாத பட்சத்தில் உங்கள் மீது உரிமைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை நீங்களே வழங்கி இருப்பதாக எடுத்துக் கொண்டு அனைத்து விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று தெரியப்படுத்தி இருந்தார்.