Home CINEMA NEWS நடிகை யாஷிகாவிற்கு விரைவில் திருமணம்…!!!வீட்டில் பார்த்த மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாஷிகா..செம ஷாக்கில் ரசிகர்கள்..மாப்பிளை யார்...

நடிகை யாஷிகாவிற்கு விரைவில் திருமணம்…!!!வீட்டில் பார்த்த மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாஷிகா..செம ஷாக்கில் ரசிகர்கள்..மாப்பிளை யார் தெரியுமா..?

yashika

யாஷிகா கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்த யாஷிகாவிற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. கிளாமர் காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் என்று இளசுகளை கவரும் படி அந்த படம் இருந்தது.

இது போன்ற படங்கள் தேவையா என்று அனைவரும் கேட்டு வந்த நேரத்தில் அந்த படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் பார்த்து இன்று நிறைய படங்கள் அதுபோல எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.

யாஷிகா அந்த படத்தின் மூலம் பெரிய பிரபலத்தை அடைந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கண்டு மேலும் பிரபலமடைந்த யாஷிகா கடை திறப்பு விழா படப்பிடிப்பு என்று செம பிஸியாக இருந்தார்.சமீபத்தில் SJ சூர்யா அவர்களுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சூட்டிங் இல்லாத நேரத்தில் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் ECR சாலையில் ஜாலியாக பொழுதை கழித்து வந்த யாஷிகா. படுவேகமாக ஈசிஆரில் காரை ஓட்டி கார் தடுப்புச் சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே தனது தோழி பவானி என்பவரை இழந்தார்.

யாஷிகாவிற்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை முன்னேறி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வந்த யாஷிகா விபத்து நடந்த அன்று தன்னைக் காப்பாற்றிய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

சுமார் 4 மாதம் படுத்த படுக்கையாக இருந்து தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கும் யாஷிகா மீண்டும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது யாஷிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இது செட்டில் ஆவதற்கான நேரம். எனக்கு சினிமா பிடிக்கும். என்ன நடந்தாலும், நான் தொடர்ந்து உங்களை மகிழ்விக்கப் போகிறேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனக்கு லவ் எல்லாம் செட்டாகாது. உங்களது ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version