நடிகை வாணி போஜன் இவரை குட்டி நயன்தாரா என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் செல்லமாக அழைக்கிறார்கள்.அசோக் செல்வன் உடன் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்த வாணி போஜன் அந்த படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதற்கு முன் தமிழில் ஒரு இரவு, அதிகாரம் 79 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் வாணி போஜன் ஓ மை கடவுளே ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.நடிகை வாணி போஜன் தற்போது சிம்பு படம், சந்தீப் கிஷனின் புதிய படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியலில் நடித்து வந்த வாணி போஜன் அதன்பின் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து வந்தார் அதனை தொடர்ந்து தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் சத்யபிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சீரியலில் நடிக்கும்போது வாணி போஜனுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். தற்பொழுது வாணி தமிழ் படங்களிலும் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் அடுத்தடுத்து படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை வாணி போஜன் படக்குழுவினர் மீது அப்செட்டில் இருக்கிறார் காரணம் மகான் படத்தில் தான் நடித்த காட்சிகளை மொத்தமாக படக்குழுவினர் நீக்கி விட்டனர் என்ற வருத்தத்தில் உள்ளாராம். சீயான் விக்ரமுடன் ஜோடியாக சில காட்சிகள் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் சில காட்சிகள் நெருக்கமாகவும் நடித்துள்ளார் ஆனால் மகான் படத்தில் அவர் நடித்த எந்த ஒரு காட்சியும் இல்லாததால் படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாணி போஜன் படக்குழுவினர் மீது அதிருப்தியில் இருக்கிறாராம்.
இந்நிலையில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் வாணி போஜன் ஸ்லீவ் லேஸ் சேலையில் சொக்க வைக்கும் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.