Home CINEMA NEWS மேகங்களின் நடுவே பனித்துளி போல புகைப்படத்தை வெளியிட்ட ரெஜினா கஸன்ட்ரா.!! அது உருவான வீடியோவையும் வெளியிட்டார்.!!

மேகங்களின் நடுவே பனித்துளி போல புகைப்படத்தை வெளியிட்ட ரெஜினா கஸன்ட்ரா.!! அது உருவான வீடியோவையும் வெளியிட்டார்.!!

தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா, கண்ட நாள் முதல் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அழகிய அசுரா, சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், சிலுக்குவார்பட்டிசிங்கம், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

ரெஜினா தமிழ் மொழி மட்டுமின்றி, கன்னடம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர வேண்டும் என்று ஆசை அதனால் தொடர்ந்து கவர்ச்சி கவர்ச்சி குறையாமல் தன் படத்தில் காட்டி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த சந்திரமௌலி படத்தில் நீச்சல் உடையில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேகக் கூட்டத்தின் நடுவே படுத்து உறங்குவது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எப்படி இந்த புகைப்படத்தை எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு ரெஜினா இப்படி தான் இந்த புகைப்படம் உருவானது என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version