Home CINEMA NEWS வீட்டில் உக்கார்ந்து இன்ஸ்டா போஸ்ட் போடாமல் பசியால் அவதிப்படும் மக்களை நேரில் சந்தித்து உணவு வழங்கி...

வீட்டில் உக்கார்ந்து இன்ஸ்டா போஸ்ட் போடாமல் பசியால் அவதிப்படும் மக்களை நேரில் சந்தித்து உணவு வழங்கி வரும் நடிகை ராசி கண்ணா..!!!

raashi khana helps to people

தமிழ் சினிமாவில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்காநொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராசி கண்ணா.

தனது முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன் பின்பு ஜெயம்ரவி உடன் அடங்கமறு, விஜய் சேதுபதி உடன் சங்கத்தமிழன், விஷால் உடன் அயோக்கியா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராசி கண்ணா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்,

அரண்மனை 3, துக்ளக் தர்பார், சர்தார், மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். அவர் ஹைதராபாத் சாலையோர உணவின்றி தவித்த மக்களுக்கு பழங்கள் மற்றும் பிரெட் போன்ற உணவு பொருட்களை வழங்கியுள்ளார்.

தற்போது இரண்டாவது அலையின் போது உணவு வழங்கும் பணியை தொடங்கி உள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 1,200 பேருக்கு மூன்று நாட்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பிரட், பிஸ்கெட், பழங்கள் அடங்கிய பையை ஹைதராபாத்தில் நேற்று வழங்கினார். அந்த பணியை கொரோனா காலம் முடியும் வரை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version