பிரியா பவானி சங்கர் முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியலில் பிரியாவின் ஹோம்லியான நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தார்கள். ப்ரியாவின் முகபாவனைகள் க்யூட்டாக இருக்கும் ரசிகர்களும் அடிக்கடி இவரிடம் எப்பொழுது சினிமாவில் நடிப்பிங்க என்று கேட்டு வந்தார்கள். முதலில் சின்னத்திரையில் மட்டும் ஆர்வம் காட்டிய பிரியா பவானி சங்கர் மேயாத மான் என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றிப்படமாக இவருக்கு அமைந்தது அதுபோல கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைய பெரிய ஹீரோயினை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பார்வை பிரியா பவானி சங்கர் மீது திரும்பியது.
தற்பொழுது SJ சூர்யாவின் பொம்மை, அசோக் செல்வனின் ஹாஸ்டல், அருண்விஜயன் யானை, சிம்பு கௌதம் கார்த்தியின் 10 தல, தனுஷின் திருச்சிற்றம்பலம் கமலின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்.
நடிகை பிரியா பவானி ஷங்கர் தீடீர் என கவர்ச்சி ட்ராக்கில் இறங்கியுள்ளார். அவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.