Home NEWS போடகூடாத இடத்தில் டாட்டூ போட்டு செல்பி எடுத்த நடிகை ஆண்ட்ரியா…!!! தீயாய் பரவும் புகைப்படம்.

போடகூடாத இடத்தில் டாட்டூ போட்டு செல்பி எடுத்த நடிகை ஆண்ட்ரியா…!!! தீயாய் பரவும் புகைப்படம்.

andrea jeremiah

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். அதைத் தொடர்ந்து தரமணி, துப்பரிவாலன், வடசென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா இறுதியாக நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் துப்பறிவாளன் திரைப்படத்தில் கொலை கொள்ளை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் அரண்மனை படத்தில் பேயாக நடித்து இருந்தார். நடிகை ஆண்ட்ரியா வடசென்னை படத்தில் இயக்குனர் அமீர் உடன் இணைந்து நடித்திருப்பார் அதில் ராஜன் பொண்டாட்டி டா என்ற வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதோடு தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு திரைப்படத்தின் ஆண்ட்ரியா நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவின. தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேண்ட்டை லைட்டாக கீழே இறக்கி டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் பனியனும், ஜீன்ஸ் பேண்ட் போட்ட படி ஆண்ட்ரியா கண்ணாடி முன்பு நின்று வயிற்றில் குத்தி உள்ள பட்டாம்பூச்சி பாட்டு தெரியும்படி செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டாட்டூ போட இடமே கிடைக்கலையா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version