ஊரடங்கு உத்தரவின் காரணமாக மன்னார்குடியில் சிக்கி தவித்த பாம்பே சர்க்கஸ் ஊழியர்களின் நிலைமை சென்ற வாரம் செய்தித்தாள்களில் வந்தது. இந்த செய்தியை கண்ட நடிகர் விஜய் அவரது ரசிகர் மன்ற நிவாரகிகளுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு முடிந்த உதவியை ஏற்படுத்தி கொடுக்க சொன்னார்.
நடிகர் விஜயின் உத்தரவின் பெயரில் மன்னார்குடி ரசிகர் மன்றத்தினர் இன்று அவர்களுக்கு 120 கிலோ அரிசி, காய்கறிகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் 8500 ருபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தையும் வழங்கினார்கள்.
மன்னார்குடி ரசிகர் மன்றத்தினர் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நாட்களுக்கு முன் சிக்கன் பிரியாணி போன்ற மத்திய உணவுகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.