Home CINEMA NEWS மீண்டும் ஒரு நிஜ கதையில் நடிகர் சூர்யா ..!! இயக்குவது இந்த நடிகரா ..?

மீண்டும் ஒரு நிஜ கதையில் நடிகர் சூர்யா ..!! இயக்குவது இந்த நடிகரா ..?

சமீப காலமாக சூர்யா கதைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பையும் நல்ல மதிப்பையும் சூர்யாவுக்கு பெற்று தந்துள்ளது.

தற்பொழுது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சூர்யாவிற்கு பல பட வாய்ப்புகளும் வருகின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து யோகி பாபு, கிங் சி, கோவை சரளா, ஆனந்தராஜ் என நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல கதாநாயகன் ஹிந்தி கதாநாயகியான திஷா பதானி நடிக்கிறார். இந்த படம் ஒரு சரித்திர படமாக உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு ஏற்கனவே சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய சூரரை போற்று இயக்குனரான சுதா கொங்காராவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே சூர்யா பிரபல பிரிட்டானியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபரான ராஜன் பிள்ளை வாழ்க்கையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. பல மர்மங்கள் நிறைந்தது ராஜபிள்ளையின் பயோ பிக். இந்த படத்தை ஒரு வெப் சீரியஸ் ஆக உருவாக உள்ளது. இதனை பிரபல மலையாள நடிகர் மற்றும் தமிழிலும் மிகவும் பிரபலமான நடிகரான பிரித்விராஜ் இயக்க உள்ளார் என்றும் பேச்சுகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே சூரரைப்போற்று படத்தில் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி. ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பையும் பெரும் வெற்றியையும் ரசிகர்கள் கொடுத்ததால் இந்த படமும் கண்டிப்பாக சூர்யாவுக்கு வெற்றியை தரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Exit mobile version