வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் யானையை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறுவது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இதுவும் ஒன்று.
பார்வையாளர்களாக வந்து வனவிலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை ஏற்படுத்தும் விதமாக இப்பூங்கா விலங்கு தத்தெடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் விலங்குகளை தடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளது. அதற்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு மற்றும் பூங்காவினை இலவசமாக சுற்றி பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பூங்காவில் உள்ள விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரக்ருதி என்ற பெண் யானையையும் ஆறு மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இது விலங்குகளின் மீதான அவரது அக்கறை ஆர்வத்தைக் காட்டுகிறது. ஏற்கனவே அவர் 2018ஆம் ஆண்டு அணு என்ற வெள்ளை குறியை தத்தெடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor #Sivakarthikeyan has adopted Lion 'Vishnu' & Elephant 'Prakrithi' of #Vandalurzoo for a period of 6 months. pic.twitter.com/Sx6frxK2By
— Vandalur Zoo @Arignar Anna Zoological Park Chennai (@VandalurZoo) September 4, 2021