தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் அஜீத், விஜய்க்கு போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் பிரஷாந்த் கடந்த 2005ஆம் ஆண்டு தொழிலதிபரின் மகளான கிரகலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
அவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் கிரகலட்சுமி பிரசாந்த் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது. அதில் கிரகலட்சுமி நடிகர் பிரஷாந்தை விட மூத்தவர் என்றும் ஏற்கனவே அவருக்கு திருமணமானதை கூறாமல் ஏமாற்றி பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டன. ஆகையால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஆகையால் திருமண வாழ்க்கையில் உடைந்து போன பிரஷாந்த் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினாலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். தற்போது நடிகர் பிரசாந்த் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது உடல் எடை குறைத்து தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு சமீபகாலமாக பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரசாந்தின் தந்தை அதனை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இயக்குனர் தியாகராஜா இயக்கி பிரஷாந்த் நடித்துவரும் படம் வெளியான ஒரு மாதத்திலேயே திருமணம் நடைபெற உள்ளது என பேட்டி ஒன்றில் பிரசாந்தின் தந்தை கூறியுள்ளார். இந்த திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என கூறப்படுகிறது.