Home CINEMA NEWS நேற்று நள்ளிரவு கோலாகலமாக நடைபெற்ற ஆதி- நிக்கி கல்ராணி திருமணம்…!!! திரையுலகினர் நேரில் வாழ்த்து.

நேற்று நள்ளிரவு கோலாகலமாக நடைபெற்ற ஆதி- நிக்கி கல்ராணி திருமணம்…!!! திரையுலகினர் நேரில் வாழ்த்து.

aadhi

நடிகர் ஆதி – நிக்கி கல்ராணி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று நள்ளிரவு ஆதி நிக்கி கல்ராணி திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ஆதி மிருகம், அரவான், யாகவராயினும் நாகாக்க, ஈரம், மரகதநாணயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கிளாப் படத்தில் நடித்துள்ளார். அதோடு இயக்குனர் லிங்குசாமி இயக்கும் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்பாதிக்க கடந்த மார்ச் மாதம் விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சென்னையில் எளிமையாக நடைபெற்ற நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இவர்கள் திருமணம் மே 18ஆம் தேதி நேற்று நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாயின. அதன்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் இரவு ஒரு மணி அளவில் நடிகர் ஆதி நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டினார். இதில் இரு வீட்டார் பெற்றோர்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், இசையமைப்பாளர் இளையராஜா, தேவிஸ்ரீ பிரசாத், விஜயகுமார், ஜீவா, அருண்விஜய், நானி, சந்தீப் கிஷன், சசிகுமார், பாக்யராஜ்-பூர்ணிமா போன்ற பல திரையுலகினர் திருமணத்தில் கலந்து கொண்டனர். விருந்தினர்களை இருவீட்டார் உறவினர்களும் வரவேற்றனர்.

Exit mobile version