Home NEWS மலை பிளந்து விழுந்ததில் 6 சுற்றுலா பயணிகள் பலி…!!! படகு சவாரியில் பரிதாபம்.

மலை பிளந்து விழுந்ததில் 6 சுற்றுலா பயணிகள் பலி…!!! படகு சவாரியில் பரிதாபம்.

boat

பிரேசில் நாட்டில் மலை பிளந்து ஏரியில் விழுந்ததில் படகில் பயணித்த 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் மினாஸ் கிரெய்ஸ் மகாணத்தில் “பார்னஸ் ஏரி” அமைந்துள்ளது. உயரமான மலைக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள பிரபலமான இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் படகில் வழங்குகின்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஏரியை ஒட்டியுள்ள மலையில் பிளவு ஏற்பட்டது. பிரமாண்டமான ஏரி ஒன்று உடைந்து ஏரியில் இருந்த 2 படகுகளின் மீது விழுந்தது. இதில் படகில் இருந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர்.

20 பேரை காணவில்லை மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 பேர் ஏரியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது இந்த படகு விபத்து மற்றொரு படகில் இருந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

https://24x7tamil.com/wp-content/uploads/2022/01/brazil.mp4

Exit mobile version