Home NEWS இந்தியாவிலேயே முதல் முறையாக 3 அடி உயர குள்ள மனிதனுக்கு கார் ஓட்ட டிரைவிங் லைசென்ஸ்...

இந்தியாவிலேயே முதல் முறையாக 3 அடி உயர குள்ள மனிதனுக்கு கார் ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் பெற்று சாதனை…!!!

licence

இந்தியாவில் முதல் முறையாக 3 அடி உயரமே உள்ள ஒருவர் கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கட்டப்பள்ளிசிவபால் 42 வயதான இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் கரீம்நகர் மாவட்டம் இவர் நீண்ட முயற்சிக்கு பிறகு கார் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றுள்ளார். இவ்வாறு குள்ளமான ஒருவர் இந்தியாவில் கார் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றிருப்பது இதுவே முதல்முறை.

இதற்காக நான் அனுபவித்த வேதனைகள் பற்றி சிவபால் கூறியுள்ளார். படிக்கும்போதே எல்லோரும் என்னை கிண்டல் செய்வார்கள். பட்டப்படிப்பு முடித்த பிறகு பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன். நான் குள்ளமாக இருப்பதால் யாரும் வேலை தரவில்லை கடைசியாக தனது நண்பரின் முயற்சியால் தற்போது வேலை செய்யும் கம்பெனியில் வேலை கிடைத்தது. இங்கு 20 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். சில நேரங்களில் வீட்டுக்குச் செல்வதற்கு முன் பதிவு செய்வேன்.

ஆனால் அவர்கள் வந்து பார்த்துவிட்டு என்னை ஏற்றாமல் சென்றுவிடுவார்கள். பலமுறை இப்படி நடந்துள்ளது. அப்போது கண்ணீர் விடுவேன். எனது மனைவியுடன் வெளியில் செல்லும் போது என் உருவத்தை ஏளனம் செய்வார்கள். அதனால் நானே சொந்தமாக கார் வாங்கி ஓட்டு முடிவு செய்தேன். இணையதளத்தில் தேடியபோது அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் உதவி கிடைத்தது. அவர் கொடுத்த ஆலோசனையின்படி எனக்கு ஏற்ற வகையில் காரை மாற்றி அமைத்தேன்.

பின்னர் போக்குவரத்து அதிகாரிகளை சந்தித்து ஓட்டுனர் உரிமம் கேட்டேன். உயரத்தை காரணமாக காட்டி மறுத்து விட்டனர். பின்னர் உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் போட்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே உரிமம் பெற்று காரை ஓட்டினேன். அதில் திருப்தி அடைந்த பிறகே அதிகாரிகள் எனக்கு முழு நேர ஓட்டுனர் உரிமத்தை வழங்கினர். இதன் மூலம் லிம்கா சாதனை புத்தகம் உட்பட பல்வேறு சாதனைகள் இடம் பெற்று உள்ளேன் என கூறியுள்ளார்.

Exit mobile version