டெல்லி: கொரோனா நேரத்தில் காற்று மாசுபடாமல் இருக்க சுற்றுச்சூழல் துறை வழியாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அது மட்டும் அல்லாமல் காற்றின் மாசைக் குறைப்பதற்காக இதுவரை ரூபாய் 224 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வருகின்ற 2024 காற்றின் மாசு அளவு 30% வரை குறைக்க இலக்கு வைத்திருப்பதாகவும் சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருளாக மாற்றும் பணிகள் செயல்பட தொடங்கி விட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கூறியுள்ளனர்.