மருத்துவத்தை வியாபாரமாக பார்க்கும் டாக்டர்கள் மத்தியில் மருத்துவத்தை சேவையாக செய்து மறைந்த இதுபோல் கடவுள்களும் இருக்கிறார்கள்.
டாக்டர் கோபால் வயது 77 இவர் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவரை சந்தித்து சிகிச்சை பெற இவர் வாங்கும் கட்டணம் 10 ரூபாய் மட்டுமே.
மன்னார்குடியை பூர்விகமாகக் கொண்ட கோபால் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றினார். மருத்துவ பேராசிரியராகவும் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்த கோபால் அவர்கள் ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தாராம் அதன்பின் காலங்கள் மாற தற்பொழுது 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார் டாக்டர் கோபால். நோயாளிகளே 10 ரூபாய் எப்படி உங்களுக்கு போதும் ஐயா நீங்கள் 50 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்கள் ஆனால் கோபால் அவர்கள் 10 ரூபாய் எனக்கு போதுமானது என்று கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவமும் பார்த்துள்ளார் மருந்து மாத்திரை கூட சில நேரங்களில் காசு வாங்க மாட்டாராம் இந்த டாக்டர்.
சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மருத்துவர் கோபால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டரின் மறைவை அறிந்த அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இது போல மருத்துவ சேவை செய்த டாக்டர்கள் நம் கண்ணுக்குத் தெரிந்த கடவுள் தான்.