ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடிகர் விஜய்சேதுபதி உதவியதாக இருந்துள்ளார். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தன்னார்வு தொண்டு நிறுவனம் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் இதன் நிர்வாக அறங்காவலராக பணியாற்றி வருபவர் இ.ரா. வீரராகவன் வேலைவாய்ப்பு இருக்கும் இடங்கள் நிறுவனங்களை கண்டுபிடித்து அதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து கொடுப்பது இந்த அமைப்பின் பணி இந்த அமைப்பை பின்னணியில் இருந்து இயக்கி வருவது நடிகர் விஜய் சேதுபதி என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து வீரராகவன் கூறியது நான் புதுச்சேரியில் 2016 ஆம் ஆண்டு முதல் பல வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்கி அதன் மூலம் சின்ன சின்ன வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தேன். இந்த தகவலை அறிந்த சன் டிவி “நம்ம ஊரு ஹீரோ” என்ற நிகழ்ச்சியில் என்னை கலந்து கொள்ள வைத்தது அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் என்னை சந்தித்த விஜய் சேதுபதி உங்கள் பணிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்றார். அவரை நம்பி நான் பார்த்து வந்த அந்த அரசுப் பள்ளி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்த பணியில் முழுமையாக இறங்கினேன். நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சிக்குப் பிறகு வேலை வழங்கும் நிறுவனங்கள், வேலை தேடும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் என்னோடு தொடர்பு கொண்டார்கள் இதனை விஜய் சேதுபதியுடன் தெரிவித்தேன்.
மகிழ்ச்சி அடைந்த அவர் இதனை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக மாற்ற சொன்னார். அதன்படி வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் முழு நேர பணியாளர் களுக்கு விஜய் சேதுபதி மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறார்.
அரசு மற்றும் தனியார் அமைப்புகள் உதவ தொடங்கியது. இதுவரை இந்த அமைப்பின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்து 133 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 1400 வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் இணைந்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் விஜய் சேதுபதி இருப்பது இதுவரை யாருக்கும் தெரியாது என்றார்.