யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக நடித்து இருந்தார் அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ஸ்ருதி எந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்கள் நடித்தாலும் பெரிய அளவிற்கு பிரபலம் அடையாத யாஷிகா இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப்படம் யாஷிகா விற்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் டபுள் மீனிங் காட்சிகள், கவர்ச்சி காட்சிகள் என்று பலரை முகம் சுளிக்க வைத்தாலும் இளைஞர்களை தூண்டில் போட்டு இழுத்து என்பதே உண்மை.அதற்கு முக்கிய காரணம் யாஷிகா.
அந்தப் படம் கொடுத்த பிரபலம் யாஷிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் அதனை தொடர்ந்து நோட்டா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்த யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகண்டு மேலும் பிரபலம் அடைந்தார். தற்பொழுது கடமையை செய், ராஜபீமா, பாம்பாட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ECR சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அந்த வீடியோக்கள் நேற்று இணையத்தில் வைரல் ஆனது அனைவரும் அறிந்ததே சைக்கிள் பயிற்சி முடித்தவுடன் பொதுமக்கள் சிலர் அவருடன் உரையாடி செல்பி எடுத்துக் கொண்ட முதல்வர் நடிகை யாஷிகா உடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படத்தை யாஷிகா வெளியிட்டிருந்தார்.