யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமா இளைஞர்களின் கனவுக் கன்னி கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக அறிமுகமாகி அதன்பின் இருட்டு அறை முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் முதல் படமே மோசமான படமாக அமைந்தாலும் இவருக்கு பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார் பிக்பாஸ் பின்பு கடை திறப்பு விழா, மாடல் போட்டோஷூட் என்று படு பிசியாக இருந்த யாஷிகா ஒருநாள் இரவு சூட்டிங் முடித்தபின் அதிவேகமாக காரில் பயணித்து விபத்தில் சிக்கினார். அந்த கோர விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான பவானி என்பவரை சம்பவ இடத்திலேயே பறி கொடுத்தார்.
யாஷிகாவின் கார் விபத்து எப்படி நடந்தது என்று ஒரு தனியார் யூடியூப் சேனல் பேட்டியும் எடுத்து அப்போது அருகில் இருந்தவர்கள் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்கள் ஆனால் போலீஸ் விசாரணையில் அது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை இது குறித்து பிரபல சினிமா நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் அவர்கள் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் குடிக்கவில்லை அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் அவர்கள் போதைப் பொருட்களை உட்கொண்டு இருந்ததால் தான் விபத்து நடந்தது என்று கூறிவந்தார்.
யாஷிகாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் அடிக்கடி யாஷிகா தனது தோழி பவானி நினைத்து இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு வருகிறார் சமீபத்தில் அவர் பதிவிட்ட பதிவில் எனது மிகப்பெரிய நலம் விரும்பி மற்றும் சகோதரி நீ. நான் உன்னை இழந்துவிட்டேன் ஒருநாள் கூட எளிதில் கடந்து செல்லவில்லை நீ இல்லாமல் நான் நேரத்திற்கு சென்று எல்லாவற்றையும் மாற்ற விரும்புகிறேன். நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் எங்களை விட்டுச் செல்வதற்கு முன்பு நீ எனக்கு அளித்த இந்த நினைவுகள் அதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் .
நீங்கள் ஒரு தேவதை எங்களை மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ஒரு மாணிக்கம் நான் உங்களை உடைத்துவிட்டுவிட்டேன் நீங்கள் ஒரு சிறந்த இடத்தில் இருக்க நான் பிரார்த்திக்கிறேன், விரைவில் உங்களை பார்க்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
யாஷிகாவின் உடல் நிலை பற்றி எந்த செய்திகளும் வெளிவரும் இருக்கும் நிலையில் இந்த பதிவில் இறுதியில் விரைவில் உங்களை பார்க்கிறேன் என்று அவர் கூறி இருப்பது யாஷிகாவின் நிலை மோசமாக உள்ளதோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CTrj2VFDqN1Yse2Xh1aowIzcvET4kSV3_l6Owk0/