யாஷிகா தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் சுயநினைவின்றி சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார் தற்பொழுது சில அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரளவிற்கு நலமாக இருக்கும் யாஷிகா. நேற்று கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்த அவரது தோழி பவானி என்பவரை நினைத்து உருகி போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார்.
அதில் கடைசியாக விரைவில் நான் உன்னை பார்க்க வருகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.யாஷிகாவின் ரசிகர்கள் யாஷிகாவின் உடல்நிலை மோசமாக உள்ளதா ஏன் இப்படி பதிவிட்டு உள்ளார் என்று டுவிட் செய்ய ஆரம்பித்தார்கள்.
யாஷிகாவின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளிவர யாஷிகா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் அதில் யாஷிகாவின் அம்மா உணவு கொடுப்பது போல யாஷிகா கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு பார்க்கவே பரிதாபமாக படுத்திருந்தார் அவர் அருகில் அவருடைய செல்ல நாய்க்குட்டி ஒன்றை வைத்திருந்தார்.
இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா நேற்று புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார் அதனை பார்த்த நடிகர் மற்றும் இயக்குனர் SJ சூர்யா அவர்கள் விரைவில் எல்லாம் சரியாகும் சீக்கிரம் நலமுடன் வந்து சினிமாவில் உங்களுக்கென்று இடத்தை பிடிப்பீர்கள் என்று ஆறுதல் கூறியுள்ளார்.
SJ சூர்யா யாஷிகா நடித்த கடமையை செய் என்ற படம் திரைக்கு விரைவில் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.