யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக நடித்த இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பார்க்க மாடர்னாகவும் கிளாமராகவும் இருக்கும் யாஷிகா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.
கடை திறப்பு விழா பிரமோஷன் என்று லட்சக்கணக்கான ரூபாய் சம்பாரித்து கொண்டிருந்தார். யாஷிகா சூட்டிங் முடிந்து தனது நண்பர்களுடன் காரில் இரவு நேரத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த யாஷிகா ஈசிஆர் ரோட்டில் அவருடைய கார் தடம்புரண்டு கவிழ்ந்தது.
யாஷிகா உடன் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் காரை ஓட்டிய யாஷிகாவை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் ஆனால் யாஷிகா உடன் பயணித்த அவருடைய நெருங்கிய தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போன வருடம் ஜூலை 24ஆம் தேதி இதே நாள் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து தற்பொழுது யாஷிகா தனது தோழியை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு உள்ளார்.
அதில் தனது தோழி பவனியுடன் அவர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் மற்றும் லிப் கிஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார் யாஷிகா.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் யாஷிகா வெளியிட்டது.