விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை உள்வாங்கி சிறப்பாக நடிக்க கூடிய நடிகர்களில் சேதுபதி அவர்களும் ஒருவர்.
ஆரம்பத்தில் சினிமாவே விரும்பே பார்க்காத விஜய் சேதுபதி படித்து முடித்தவுடன் வேலையில் தேடும் போது சினிமாவில் 10 தோடு பதினொன்னாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலில் செல்வராகவனின் புதுப்பேட்டை என்ற படத்தின் மூலம் வெளியுலகத்திற்கு தெரிய வந்தர். அதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படத்தில் முகம் கூட வெளியில் தெரியவில்லை.
நீண்ட நாட்களாக பின்னிலிருந்து முகம் காட்ட முடியாத விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாகவும் விஜய் சேதுபதியின் நடிப்பு வெளியுலகத்திற்கு தெரியவந்தது. அந்தப் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுக் கொண்டு இருந்த விஜய் சேதுபதியிடம் ஒரு தயாரிப்பாளர் தனது புதிய படத்திற்கு சம்பளம் எவ்வளவு கேட்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார் அதற்கு விஜய் சேதுபதி 7 லட்சம் என்று கூறியுள்ளார் அதற்கு அந்த தயாரிப்பாளர் 7 லட்சம் எல்லாம் ரொம்ப ஓவர் என்று கூற விஜய் சேதுபதி பாதிக்குப் பாதி தாங்க 3 லட்சம் என்று கூறியுள்ளார் அதற்கு இந்த மூஞ்சிக்கு எல்லாம் 3 லட்சம் தர முடியாது என்று கூறினாராம் தயாரிப்பாளர். கடைசியாக நான் ஃப்ரீயா நடித்துக் கொடுக்கிறேன் கதை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு கதையும் சொல்ல முடியாது என்றாராம் தயாரிப்பாளர் வெறுத்துப்போய் விஜய் சேதுபதி விலகி விட்டாராம் அதன்பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சூதுகவ்வும் என்று வரிசையாக ஹிட் படமாக அமைந்ததாம்.
மாஸ்டர் படத்தில் கூட விஜய் சேதுபதி நடிப்பில் மிரட்டியிருப்பார் மாஸ்டர் படத்தின் இன்டர்வல் பிளாக் காட்சியில் லோகேஷ் கனகராஜ் முதலில் ஐம் வெயிட்டிங் என்று விஜயின் வசனத்தை சொல்ல சொன்னாராம் லோகேஷ்சிடம் விஜய் சாரின் டயலாக்கை நான் உடனே சொன்னால் அதற்கு ரீச் இருக்காது அதனால் அதற்கு முன்பு இந்த டயலாக்கை சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு வாத்தி நான் சொல்லப்போறது உனக்கு ஒன்னும் புதுசு இல்ல என்று கூறிவிட்டு கொஞ்சம் கேப் கொடுத்து ஐ அம் வெயிட்டிங் என்று கூறினாராம்.
விஜய்சேதுபதி கொடுத்த ஐடியா மாஸ்டர் படத்தின் இன்டெர்வல் பிளாக் மாஸ்ஸாக இருந்ததற்கு காரணம்.