கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3வது சீசன் மூலம் கம் பேக் கொடுத்தார் வனிதா விஜயகுமார். அந்த சீசனில் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் கலகலப்பாக இருந்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வனிதாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தன.
அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்காமல் போனது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பீட்டர் பால் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக கூறி அவரை துரத்தி விட்டார் வனிதா.
தற்போது இணையதள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.பிரபல சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் நடித்தார். பிறகு தற்போது வேறொரு ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு கார்த்தி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியின் கல்யாண கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில், அபிராமி வீட்டு உறவினராக முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் வனிதா.