திரிஷா ஜோடி என்ற படத்தில் சிம்ரன் அவர்களுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் முதல் முதலாக தலைகாட்டினார் அதன்பின் மௌனம் பேசியதே என்ற சூர்யா படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த திரிஷா தொடர்ந்து தமிழில் நடித்து வந்தார் முதலில் காதல் கதைகளில் நடித்து வந்த திரிஷா தளபதி விஜய்யுடன் கில்லி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
கில்லி படம் விஜய் மற்றும் திரிஷா கேரியரிலேயே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கில்லி படத்திற்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் ஏறுமுகத்தில் ஏறியது என்று சொல்லலாம் விஜய்க்கு சரியான ஜோடி த்ரிஷா தான் என்று விஜய் நடிக்கும் படத்திற்கு எல்லாம் திரிஷாவை அணுகுவதை வழக்கமாக வைத்திருந்தனர் தயாரிப்பாளர் தரப்பு.
விஜயும் திரிஷாவும் தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். முதலில் குருவி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது நயன்தாரா ஆனால் விஜயை ஒரு நட்சத்திர ஹோட்டலில் திரிஷா சந்தித்து பல மணி நேரங்கள் பேசியபின் திரிஷா தான் படத்தின் கதாநாயகி என்று அறிவித்தார்கள் படக்குழுவினர்.
அந்தப் படத்திற்குப் பிறகு விஜயும் திரிஷாவும் சேர்ந்து நடிக்கவில்லை. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்ட திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் ஜெஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.
இதற்கிடையில் ராணாவுடன் காதல் அதன் பின் காதல் தோல்வி சந்தித்த த்ரிஷா-வருண் மணியன் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருந்தார். நிச்சயதார்த்தமும் முடிந்து திருமணம் நெருங்கி வரும் நேரத்தில் இருவரும் பிரிந்தார்கள். அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய திரிஷா தற்பொழுது இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் வெளியானதும் த்ரிஷாவிற்கு இன்னும் பெரிய வரவேற்பு இருக்கும் என்கிறார்கள் சினி வட்டாரத்தினர் தற்பொழுது பிரிந்தா என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் த்ரிஷா சமூக வலைத்தளத்தில் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் பௌர்ணமி நிலவு நீங்கள் என்று வர்ணித்து வருகின்றனர். திரிஷா சில கிளோஸ் அப் புகைப்படங்களை வெளியிட்டு இந்த புகைப்படங்கள் பின்னர் டெலிட் செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார்.