Thursday, April 25, 2024
-- Advertisement--

தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாததால் டிரம்மில் போட்டு சிமெண்ட் பூசி மூடிய மகன்…!!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்.

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர் 2வது பிரதான சாலையில் வசிப்பவர் 86 வயதான மூதாட்டி செண்பகம். அவருடைய 53 வயதான மகன் சுரேஷ் வசித்து வந்தனர். அதில் சுரேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவருக்கு திருமணமாகிய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களாக மாமியாரை காணவில்லை என சுரேஷின் மனைவி, சுரேஷின் அண்ணனிடம் கூறியுள்ளார். இந்நிலையில் சுரேஷின் அண்ணன் சுரேஷிடம் தாய் செண்பகம் எங்கே என கேட்டுள்ளார். அதற்கு செண்பகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும் அவரை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் அவரை வீட்டில் உள்ள டிரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசி அடக்கம் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து நீலாங்கரை காவல் துறையினரிடம் அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த நீலாங்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த டிரம்மில் மூடப்பட்டிருந்த 86 வயதான மூதாட்டியின் உடலை ட்ரம்முடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் தீவிரமான விசாரணைய மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles