Thursday, April 25, 2024
-- Advertisement--

இறந்த மனைவிக்காக 15 லட்சத்தில் கோவில் கட்டிய கணவன்…!!! நெகிழ்ச்சியில் ஊர்மக்கள்.

திருப்பத்தூர் அருகே உடல்நலம் இன்றி இறந்த மனைவிக்கு 15 லட்சத்தில் கோயில் கட்டி சிலை அமைத்து கணவர் வழிபடுவது பொது மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தக்டி வட்டம் பகுதியை சேர்த்தவர் சுப்பிரமணி கட்டிட மேஸ்திரி.

இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணம் ஆகி 35 ஆண்டுகள் ஆகிறது. மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஈஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் சுப்பிரமணி வேதனை அடைந்தார். இதனால் மனைவிக்கு கோயில் கட்ட முடிவு செய்தார்.

அதன்படி தனக்கு சொந்தமான 15 சென்ட் இடத்தில் 15 லட்சம் செலவில் கோயில் கட்டி அதில் 6 அடி உயரத்திற்கு ஈஸ்வரியின் உருவ சிலையை அமைத்துள்ளார். அதில் மனைவியின் படத்தையும் வைத்துள்ளார். மேலும் மனைவியை தெய்வமாக நினைத்து வழிபட்டு வருகிறார்.

வரும் 31ஆம் தேதி முதலாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார். இறந்த மனைவிக்கு கணவர் கட்டி உள்ள கோயிலை பார்த்து அப்பகுதி என பார்த்து நெகிழ்ந்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles