சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2009 டிசம்பர் மாதம் நசரத்பேட்டையிலுள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக அவர் இறந்தபின் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது சித்ராவின் நெருங்கிய தோழிகள் ஹேமந்த் மட்டும் குற்றவாளி இல்லை சில அரசியல் பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்ட உள்ளார்கள் என்றெல்லாம் கூறி வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சித்ராவிற்கு போதை பழக்கம் இருக்கிறது சித்ராவின் அனைத்து விஷயங்களுக்கும் ஹேமந்த் உடந்தையாக இருந்தார் என்றெல்லாம் அவதூராக செய்தி பரப்பி வந்தார்கள் சிலர்.
சித்ராவின் பெற்றோர்கள் இந்த செய்தி கேட்டவுடன் கோபம் அடைந்தனர். சித்ரா அதுபோன்ற ஆள் கிடையாது என்று தங்களது கருத்தினை முன்வைத்து வந்தனர். இதற்கிடையில் ஜாமினில் வெளிவந்த ஹேமந்த் சித்ரா வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காவல்துறை விசாரணைக்கு தடை விதித்து மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
ஹேமந்த் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். சித்ராவின் தந்தை காமராஜை ஹேமந்த் மனுவில் பதிலளிக்க உத்தரவு கொடுத்தது நீதிமன்றம்.
சித்ராவின் தந்தை காமராஜ் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் சித்ராவின் கணவர் உடல் மற்றும் மனரீதியாக சித்ராவிற்கு கொடுத்த தொந்தரவால் தான் தனது மகள் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவிட்டு இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சித்ரா வீட்டில் இல்லாத போது ஹேமந்த் அவரது பெண் தோழிகளை வீட்டுக்கு அழைத்து வருவார். ஹேமந்த் கொடுத்த உடல் மற்றும் மன ரீதியான சித்ராவாத்தை தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்று ஹேமந்த் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் சித்ராவின் தந்தை கேட்டுக்கொண்டார்.