Tuesday, April 23, 2024
-- Advertisement--

முதலாளியின் குடும்ப விழாவுக்கு சீர் வரிசையுடன் வந்து அசத்திய வடமாநில தொழிலார்கள்…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல் பரவிய நிலையில் தங்களது முதலாளியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் குடும்ப உறுப்பினர்கள் போல சீர்வரிசை உடன் வட மாநில தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்ட நிகழ்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. ராஜாமணியின் கட்டுமான நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை வேலையாட்கள் என நினைக்காமல் ராஜாமணி குடும்ப உறுப்பினர்களைப் போல பாவித்து வந்தார்.

இந்நிலையில் ராஜாமணியின் மகள் விஷ்ணுபிரியாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி பூந்தமல்லி அருகே தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்தனர். அதே போல் தன்னிடம் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனக் கூறி அவர்களுக்கும் ராஜாமணி அழைப்பு விடுத்திருந்தார்.

முதலாளியின் அழைப்பை ஏற்று வட மாநில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிக்கு குடும்ப உதவிநர்கள் போல வந்து குவிந்தனர். சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக பழங்கள், பூ, இனிப்பு மற்றும் பலகார வகைகள் சீர்வரிசை பொருட்களுடன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களை ராஜாமணி அன்புடன் வரவேற்று உபசரித்தார். மேலும் உறவினர்களைப் போல சிறுமிக்கு நலங்கு வைத்து மலர் தூவி வாழ்த்தினர்.

வடமாநில தொழிலாளர்களின் இந்த செயல் விழாவுக்கு வந்திருந்த உறவினர்களிடையே பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வட மாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்து அறுசுவை உணவு அளித்து மகிழ்வித்தனர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல் பரவிய நிலையில் இந்த பூ புனித நீராட்டு விழா நிகழ்ச்சி வரவேற்பையும் நிகழ்ச்சியை ஏற்படுத்துவது ஆக அமைந்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles