Wednesday, April 24, 2024
-- Advertisement--

விமானத்தில் பயணித்த போது மயங்கி விழுந்த பயணி..!!! டாக்டராக மாறி முதலுதவி செய்த தமிழிசை சௌந்தராஜன்…!!! குவியும் பாராட்டுக்கள்.

நடுவானில் விமானத்தில் மயங்கிய பயணிக்கு அதே விமானத்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு மருத்துவர் என்பது அனைவரும் தெரிந்து தெரிந்த ஒன்றே. அவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் பயணம் செய்தார் அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது காலை நாலு மணி அளவில் யாராவது மருத்துவர் இருக்கிறீர்களா சக பயணி ஒருவர் மயக்க நிலையில் உள்ளார் என்று விமானப் பெண் அறிவிப்பு விடுத்தார் அந்த அறிவிப்பை கேட்ட தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உடனே அந்த பயணிக்கு முதலுதவி அளித்தார்.

மயங்கிய நிலையில் இருந்த அந்தப் பயணி உடல் முழுவதும் வேர்த்து இருக்க தொடர்ந்து முதலுதவி அளித்து வந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன் அந்தப் பயணி கண் விழிக்கும் வரை அவர் அருகிலேயே அமர்ந்து பயணித்துள்ளார் சிறிது நேரத்தில் அந்தப் பயணி உடல்நிலை சரியாக கண்விழித்து இயல்பு நிலைக்கு திரும்பினார். அங்கு இருந்த சக பயணிகள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டினார்கள்.

தக்க நேரத்தில் ஒருவரின் உயிரை காப்பாற்ற உதவிய விமானப் பெண்ணுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன் விமான தரையிறங்கியதும் அந்தப் பயணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை சக விமானி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை பாராட்டியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles