Thursday, April 25, 2024
-- Advertisement--

அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக சூர்யா பெற்றோர்களுக்கு வைத்த வேண்டுகோள்…!!!

மாணவர்களின் நலனுக்காக அரசுடன் பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் சூர்யா பேசி இருப்பதாவது அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்கிறது. தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலத்தில் மீது அக்கறை இருக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளாட்சி பிரமுகர்கள் என பல தரப்பினர் இந்தக் குழுவில் இருக்கப் போகிறார்கள்.

இந்த நல்ல மாற்றத்தின் மூலமாக ஆக்கபூர்வமான முயற்சி எடுக்கிறது பள்ளிக்கல்வித்துறை பள்ளியை சுற்றி இருக்கிற எல்லா பிள்ளைகளையும் படிக்க வைப்பதும், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பது இந்த குழுவின் முக்கியமான வேலை.

அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கவனம் செலுத்தும் சூழல் உள்ள மாணவர்களுக்கு புதிய வசதியும் சூழலும் இருக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள் பள்ளிக்கான கட்டிட வசதி, மதிய உணவுத் திட்டம் மாணவர்களுக்கு அரசு தரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் வந்து செல்கிறது என்பதையும் இதை குழு கவனிப்பார்கள்.

நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்விச் சூழலும் வசதியின் கிடைக்க வேண்டும் என்றால் எல்லா அரசு பள்ளிகளிலும் நடக்க இருக்கிற மறு கூட்டமைப்பு வேளாண்மை குழு நிகழ்வுகளில் கலந்து கொள்வது மிகவும் அவசியம் சிறந்த பள்ளியில் சிறந்த கல்வியில் மாணவர்களின் உரிமை அதற்கு துணை நிற்பது உறுதி செய்வது நம் கடமை என்று சூர்யா கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles